மாநில அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும். கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் ஆர்.என்.ரவி முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்படுகிறார். தமிழக முதல்வர் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதன் மூலம் மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள். நாங்கள் வலிமையான கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தாத வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும். ராமதாசின் அரசியல் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. அதை அன்புமணி புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ஆர்.எஸ்.எஸ். கொபசெவாக கவர்னர் செயல்படுகிறார்: துரை வைகோ எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.