மினாவில் 5 மண்டலங்களில் இந்திய பயணிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து. கட்டணம் தாமதமாவதை காரணம் காட்டி 5 மண்டலங்களில் முதல் 2 மண்டல ஒதுக்கீடுகளை சவுத்ஹி அரசு ரத்து செய்துவிட்டது. எஞ்சிய 3 மண்டலங்களுக்கு கட்டனம் செலுத்தும் வசதியையும் சவுதி அரேபிய அரசு நிறுத்திவிட்டது.
சவுதி அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் இருந்து 52,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வது கேள்விக்குறியானது. ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் மூலம் சவுதி அரசுக்கு கட்டணம் செலுத்துகின்றனர். பயண ஏற்பாட்டாளர்கள் கட்டணம் செலுத்திய போதும் தூதரகம் மூலம் சவுதிக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சிறுபான்மை நல அமைக்கசகம், ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் அலட்சியத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
உரிய நடவடிக்கை எடுத்து 52,000 பேரின் ஹஜ் பயணத்தை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ் கனி ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
The post மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்: தமிழ்நாடு வக்ஃபு வாரியம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.