விருப்பங்களை நிறைவேற்றுமா விசுவாவசு புத்தாண்டு..?

“காலம்” என்னும் சக்திக்குத்தான் எத்தனை வேகம்.? எத்தனை அவசரம்.?! நேற்றுதான், பிறந்ததுபோல் தோன்றுகிறது, “குரோதி” தமிழ்ப் புத்தாண்டு. அதற்குள்ளாக முடிந்து, “விசுவாவசு” தமிழ் புத்தாண்டும் பிறக்கின்றது, இப்போது! காலத்தின் வேகம்தான் எத்தனை…? இதைத் தங்கள் மனதில் வைத்துக் கொண்டுதான், நமது முன்னோர்கள் “காலமும், கடல் அலையும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை.!” என்றனர் போலும்?ஒருவிதத்தில், பல உலக நாடுகளில், விரோதிகளாக்கிய குரோதிப் புத்தாண்டு முடிகிறது என்ற மனசாந்தியும் ஏற்படுகிறது. உலக நாடுகளிலேயே, பகைமையை வளர்த்து, விதியுடன் விளையாடியது, குரோதி!உக்ரைன் – ரஷ்யா போரிலும், பாலஸ்தீனம், இஸ்ரேல் சண்டைகளிலும் வீடிழந்து, குடும்பங்கள் சிதறி, உருக்குலைந்த பெண்களும், இளைஞர்களும், வயோதிகர்களும், கைக்குழந்தைகளும் எண்ணிலடங்கா. எவ்விதத் தவறும் செய்யாத, பிணைக்கைதிகள் பட்ட அவமானங்களும், சித்ரவதைகளும், மனித குலத்தையே தலைகுனிய வைத்துள்ளன. “பகுத்தறிவுள்ள மிருகமே மனிதன்..!” என மேலை நாட்டு அறிஞர் பல ஆண்டுகளுக்கு முன் கூறியது, நினைவிற்குரியது. அந்தப் பகுத்தறிவுதான், இப்போது எங்கு போயிற்று.? மனிதாபிமானம்தான் எங்கு சென்று மறைந்தது? மனிதனை, மனிதனே வெறுக்கும் இத்தகைய வெறி ஏன் ஏற்பட்டது? எனப் பெரியோர்களும், சான்றோர்களும் வேதனையில் ஆழ்ந்திருக்கும் விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பது நம்பிக்கையை ஊட்டியது. மிருகமாக மாறியுள்ள மனிதன் இப்புத்தாண்டிலாவது, தன் தவறை உணர்ந்து, மனிதப் பண்புடன் வாழ முயற்சிப்பானா? என்பதே பெரியோர்களின் இன்றைய கவலையாகும்.ஒருவிதத்தில், குரோதி ஆண்டு முடிகிறது என்பதால் மனமும் சாந்தி பெறுகிறது. விதியுடன் விளையாடி, மனிதனே மனிதனை கொன்று குவிக்கும் கொடூரம் இப்புத்தாண்டிலாவது நிற்குமா? -என்பதே அனைவரின் கவலையும், எதிர்பார்ப்புமாகும்.காசாவிலும், உக்ரைனிலும், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், வியாதியஸ்தர்கள் என்ற பாகுபாடு மன இரக்கம் எதுவுமின்றி, “ட்ரோன்கள்”, ராக்கெட் மூலம் வான்வெளித் தாக்குதல்களில், நிர்மூலமானவர்கள் எண்ணிலடங்காதவை! இப்படுபாதகச் செயல்கள் நின்றபாடில்லை!! இந்நிலையில்தான், விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டுடன் நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் பிறக்கின்றன. மக்கள் மனதில்தான் எத்தனையெத்தனை நம்பிக்கைகள்!இத்தகைய சூழ்நிலையில், நவகிரகங்களும் இத்தமிழ் புத்தாண்டு எவ்விதம் இருக்கப்போகிறது? என்பதை எடுத்துக்காட்டப் போகின்றது, வேதங்களின் அங்கங்களில் ஒன்றான “ேஜாதிடம்” எனும் ஒப்புயர்வற்ற வானியல் கலை!சூரிய பகவானின் சஞ்சார நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ள, “ஷோடச ஸதவர்க்கம்” எனும் வானியல் பூர்வமான கணித முறை மூலம் கணித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.”ஜோதிடம்” என்னும் தன்னிகரற்ற வானியல் கணித முறை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், எதிர்காலத்தில் என்ன நடக்கவிருக்கிறது? என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக மட்டுமே மகரிஷிகள் நமக்கு அளித்துள்ள கணித முறையல்ல! எத்தகைய தருணங்களில், நாம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்; எத்தகைய சந்தர்ப்பங்களை, நாம் எவ்விதம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்று அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கேற்ப, நம்மை மனத்தளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என வழிகாட்டி உதவும் ஒப்பற்ற வானியல் கலையே “ஜோதிடம்”! ஜோதிடக் கலையின் மூலவேர் ரிக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும் படர்ந்துள்ளது.பாரதப் புண்ணிய பூமிக்கு, தெய்வீகப் பெருமை சேர்த்த வேதகால மகரிஷிகள், ஜோதிடக் கலை பற்றிய பல நூல்களை இயற்றியுள்ளனர்.”தமிழ் முனிவர்” எனப் புகழ்வாய்ந்த அகத்தியர், ஜோதிடம் எனும் வானியல் கலையில் தன்னிகரற்ற நிபுணத்துவம் வாய்ந்தவராக விளங்கினார் என்பதற்கு அவர் இயற்றிய பல நூல்களே சான்றாகும். ஜோதிடத்தில், மருத்துவம் பற்றிய தனிப் பகுதியே உள்ளது. எந்த வியாதி, எப்போது, எந்த கிரக தோஷத்தினால் ஏற்படுகிறது? அதற்கு எத்தகைய சிகிச்சை பலனளிக்கும் என்ற விவரங்கள் மருத்துவ ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சையில் பிரசித்திப் பெற்ற மகரிஷி சுஸ்சுருதர், நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சைக்கு முன், அளிக்கவேண்டிய மயக்க மருந்துகள் பற்றிய விவரங்களை, நமக்கு அளித்துள்ளார்.அதே போன்று, மகரிஷிகள் சியவனர் மற்றும் சரகர், வாக்படர் ஆகியோரும் இதயம், சுவாஸகோசம், சிறுநீரகம், நரம்புகள், ரத்த ஓட்டம் ஆகியவை பற்றி பல நுணுக்கமான நூல்களை இயற்றியுள்ளனர். இவற்றில் பல, இன்றும் ஜெர்மனி நாட்டில் உள்ளன. சியவனர் கண்டுபிடித்த, பிரசித்தி பெற்ற “சியவனப்ராஸம்” என்னும் லேகியம் இன்றும் ஏராளமான மக்களால் உபயோகத்தில் இருந்துவருகின்றது. இதய நோய்கள் பற்றிய “அஷ்டாங்க ஹிருதயம்” எனும் புராதன நூல் நமது வேத கால மகரிஷிகள் இயற்றியதே!ஓய்வில்லாது சதா உழைத்துவரும் நமது இதயத்தை எவ்விதம் பாதுகாத்துக் கொள்வது என்ற வழிமுறைகள், இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் உறுதியுடன் கடைப்பிடித்்தால், மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய அவசியமேஇராது. நம் கையிலுள்ள, அறிவுப் பொக்கிஷங்களின் அருமை நமக்கே தெரியவில்லை. ஆனால், ஜெர்மானிய நிபுணர்கள் பலர், விலைமதிப்பிட இயலாதசருமம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு, மகரிஷி சரகர் அருளியுள்ள, “சரகர் ஸம்ஹிதை” இன்றும் ஆயுர்வேத சிகிச்சை மையங்களிலும், கேரளாவிலும் உபயோகத்தில் இருந்துவருவது அனைவரும் அறிந்ததே!!இம்மகரிஷிகளின் அனைத்து நூல்களிலும், மூலிகைகளுக்கும், மருந்துகளுக்கும் (ஔஷதம்) நவக்கிரகங்களுக்கும் குறிப்பாக ரத்த ஓட்டத்திற்கும், சூரியனுக்கும் உள்ள தொடர்பு விவரிக்கப்பட்டுள்ளன. இவ்விதம் நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள நவக்கிரகங்களின் சஞ்சார நிலைகள், வரும் விசுவாவசு புத்தாண்டில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவுள்ளன என்பதை துல்லிய கணித முறை மூலம் கணித்து “தினகரன்” வாசக அன்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நலன் கருதி இங்கு சமர்ப்பிப்பதில் மன நிறைவு பெறுகிறோம். இதனால், நீங்கள் வரும் புத்தாண்டில் மகிழ்ச்சியையும், மன நிைறவையும் பெறுவதே, நாங்கள் பெறும் பேறாகும். உங்கள் அனைவருக்கும் எமது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! இப் புத்தாண்டில், அனைத்து நலன்களையும், நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் பெற்று மகிழ இறைவனின் திருவடிகளில் பிரார்த்திக்கின்றோம்.இனி,இந்த விசுவாவசு தமிழ் புத்தாண்டின் முக்கிய தெய்வீக நிகழ்ச்சிகளைத் தெரிந்துகொள்வதற்கு முன், இப்புத்தாண்டில் நிகழவிருக்கும் கிரகணங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்! கிரகநிலைகளின் அடிப்படையில்,விசுவாவசு வருடம், சித்திரை 1 முதல், புரட்டாசி முடியும் வரை ஒரு பகுதியாகவும், ஐப்பசி 1 முதல், பங்குனி 30 வரை மற்றொரு பகுதியாகவும் இரு பகுதிகளாகக் கணித்து, பலன்கள் கூறப்பட்டுள்ளன. டிகிரி சுத்தமாகக் கணித்துக் கூறப்பட்டுள்ள இப்பலன்களினால், எமது அன்பிற்குரிய வாசக அன்பர்கள் பலன் பெற வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனையாகும். இக்கணித முறையை நமக்கு பரம கருணையுடன் வழங்கி, அருளியவர்கள், நமது பக்திக்குரிய வேதகால மகரிஷிகளாவர்.

விசுவாவசு ஆண்டு – மகரசங்கராந்தி பொங்கல் பண்டிகை!

பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்: 15-1-2026 வியாழக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.17-க்குள், கும்ப லக்னத்தில், சுக்கிர ஹோரையில், புதுப் பானையை அலங்கரித்து, பொங்கல் வைக்கவும். “பொங்கலோ, பொங்கல்” சொல்லி, சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்யவும். குடும்பத்திலுள்ள அனைவரும் சூரிய பகவானுக்கு, கற்பூராத்தி காட்டி, நமஸ்கரிக்கவும். இன்று, வீட்டிலுள்ள பெற்றோர், பெரியோர்களை வணங்கி, அவர்களது ஆசியைப் பெறவும்.மறுநாள் மாட்டுப் பொங்கல். பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றைக் குளிப்பாட்டி, மஞ்சள்-குங்குமமிட்டு, புஷ்பத்தால் அலங்கரித்து, பொங்கல் கொடுத்து, கற்பூராத்தி காட்டி, மும்முறை வலம் வந்து வணங்கவும். குடும்பத்தில், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி நிலவும். இதற்கு மறுதினம் “காணும் பொங்கல்”. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பெரியோர்கள் ஆகியோரைக் கண்டு அவர்களது ஆசியைப் பெறும் நன்னாளாகும்.

பூரண சந்திர கிரகணம் – 1

விசுவாவசு வருஷம், ஆவணி மாதம் 22-ஆம் தேதிக்கு சரியான ஆங்கலத் தேதி 7-9-2025, ஞாயிற்றுக்கிழமை, சுக்கிலபட்சம் (வளர்பிறை), பௌர்ணமி திதி, சதயம் நட்சத்திரம், கும்ப ராசியில், மேஷ லக்னத்தில், ராகு கிரஸ்த பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கிரகணம் ஆரம்பம் : இரவு மணி 9.51
கிரகணம் மத்தியமம் : இரவு மணி 11.42
கிரகணம் முடிவு : இரவு மணி 2.25
அன்று மதியம் 1.30 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகர்கள், சிறுகுழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு.

பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்்களில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். கிரகண காலத்தில், தாய் – தந்தை இழந்தவர்களுக்கு, பித்ருக்களுக்கு தில (எள்) தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால், மறைந்த முன்னோர்கள் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் வெளியே வரக்கூடாது. கிரகணச் சாயை கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கும். கிரகண காலத்தின்போது, இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் தியானம் செய்துகொண்டிருக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின்பு, நீராடி, அவரவர் குல வழக்கப்படி திருநீறணிந்து, இறைவனைப் பூஜிக்க வேண்டும்.

விசுவாவசு தமிழ் புத்தாண்டின் புண்ணிய தினங்கள்

சித்திரை 1 (14-4-2025) : விசுவாவசு, தமிழ் புத்தாண்டு பிறப்பு.
சித்திரை 13 (26-4-2025) : ராகு – கேது ராசி பெயர்ச்சி.
சித்திரை 14 (27-4-2025) : சர்வ அமாவாசை
சித்திரை 16 (29-4-2025) : கிருத்திகை விரதம்
சித்திரை 17 (30-4-2025) : அட்சய திருதியை
சித்திரை 19 (2-5-2025) : ஸ்ரீ ஆதி சங்கரர், ஸ்ரீ மத் ராமானுஜர் அவதார தினம்.
சித்திரை 20 (3-5-2025) : சஷ்டி விரதம்.
சித்திரை 21 (4-5-2025) : கத்திரி ஆரம்பம்.
சித்திரை 23 (6-5-2025) : ஸ்ரீ வாசவி ஜெயந்தி.
சித்திரை 25 (8-5-2025) : சர்வ ஏகாதசி
சித்திரை 27 (10-5-2025) : சனிப்பிரதோஷம்.
சித்திரை 28 (11-5-2025) :ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி, குரு பெயர்ச்சி
சித்திரை 29 (12-5-2025) : சித்ர குப்தர் பூஜை, சித்ராபௌர்ணமி.
வைகாசி 1 (15-5-2025) : விஷ்ணுபதி புண்ணியகாலம். வைகாசி மாதப் பிறப்பு.
வைகாசி 9 (23-5-2025) : சர்வ ஏகாதசி
வைகாசி 10 (24-5-2025) : சனிப் பிரதோஷம்.
வைகாசி 11 (25-5-2025) : மாத சிவராத்திரி.
வைகாசி 12 (26-5-2025) : சர்வ அமாவாசை.
வைகாசி 14 (28-5-2025) : அக்னி நட்சத்திரம் நிவர்த்தி.
வைகாசி 24 (7-6-2025) : சர்வ ஏகாதசி.
வைகாசி 25 (8-6-2025) : பிரதோஷம்.
வைகாசி 26 (9-6-2025) : வைகாசி விசாகம்.
வைகாசி 27 (10-6-2025) : காஞ்சி ஸ்ரீ மகாபெரியவா ஜெயந்தி.
வைகாசி 31 (14-6-2025) : சங்கடஹர சதுர்த்தி.
ஆனி 6 (21-6-2025) : ஏகாதசி.
ஆனி 8 (22-6-2025) : கூர்ம ஜெயந்தி.
ஆனி 9 (23-6-2025) : பிரதோஷம்.
ஆனி 10 (24-6-2025) : போதாயன அமாவாசை. ஆனி 11 (25-6-2025) : அமாவாசை.
ஆனி 15 (29-6-2025) : சதுர்த்தி விரதம்.
ஆனி 16 (30-6-2025) : குமார சஷ்டி.
ஆனி 17 01-7-2025) : ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். ஆனி திருமஞ்சனம். சஷ்டி விரதம்.
ஆனி 22 (6-7-2025) : சயன ஏகாதசி.
ஆனி 23 (7-7-2025) : சாதுர்மாத விரத ஆரம்பம்.
ஆனி 24 (8-7-2025) : பிரதோஷம். ஜேஷ்டாபிஷேகம்.
ஆனி 26 (10-7-2025) : குருபூர்ணிமா. வியாஸ பூஜை. பௌர்ணமி விரதம்.
ஆனி 30 (14-7-2025) : சங்கடஹர சதுர்த்தி.
ஆனி 32 (16-7-2025) : தட்சிணாயன புண்ணியக் காலம், ஆடிமாதப் பிறப்பு.
ஆடி 5 (21-7-2025) : சர்வ ஏகாதசி.
ஆடி 6 (22-7-2025) : பிரதோஷம்.
ஆடி 7 (23-7-2025) : மாத சிவராத்திரி.
ஆடி 8 (24-7-2025) : ஆடி அமாவாசை.
ஆடி 12 (28-7-2025) : திருவாடிப்பூரம். சதுர்த்தி விரதம்.
ஆடி 13 (29-7-2025) : கருட பஞ்சமி, நாக பஞ்சமி.
ஆடி 14 (30-7-2025) : சஷ்டி விரத்ம.
ஆடி 18 (3-8-2025) : 18-ம்பெருக்கு. காவிரி பூஜை விசேஷம்.
ஆடி 21 (6-8-2025) : பிரதோஷம்.
ஆடி 23 (8-8-2025) : ஸ்ரீ வரலட்சுமி விரதம்.
ஆடி 24 (9-8-2025) : ருக், யஜூர் உபாகர்மா, ரட்சாபந்தன், ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி.
ஆடி 25 (10-8-2025) : காயத்ரி ஜபம்.
ஆடி 31 (16-8-2025) : கிருஷ்ண ஜெயந்தி.
ஆவணி 4 (20-8-2025) : பிரதோஷம்.
ஆவணி 6 (22-8-2025) : சர்வ அமாவாசை
ஆவணி 10 (26-8-2025) : சாம உபாகர்மா
ஆவணி 11 (27-8-2025) :  விநாயகர் சதுர்த்தி
ஆவணி 12 (28-8-2025) : ரிஷி பஞ்சமி.
ஆவணி 13 (29-8-2025) : சஷ்டி விரதம்.
ஆவணி 22 (7-9-2025) : சந்திர கிரகணம்.
ஆவணி 23 (8-9-2025) : மகாளயபட்சம் ஆரம்பம்.
ஆவணி 30 (15-9-2025) : பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி
புரட்டாசி 1 (17-9-2025) : ஏகாதசி.
புரட்டாசி 5 (21-9-2025) : சர்வ மகாளய அமாவாசை.
புரட்டாசி 6 (22-9-2025) : நவராத்திரி ஆரம்பம்
புரட்டாசி 13 (29-9-2025) : சரஸ்வதி ஆவாஹனம்.
புரட்டாசி 15 (1-10-2025) : சரஸ்வதி பூஜை, ஆயுத பூைஜ
புரட்டாசி 16 (2-10-2025) : விஜயதசமி.
புரட்டாசி 18 (4-10-2025) : சனிப் பிரதோஷம்.
புரட்டாசி 19 (5-10-2025) : நடராஜர் அபிஷேகம்
ஐப்பசி 1 (18-10-2025) : சனிப் பிரதோஷம்், துலா காவேரி ஸ்நானம் ஆரம்பம்.
ஐப்பசி 2 (19-10-2025) : யம தீபம். இரவு சதுர்த்தசி ஸ்நானம்
ஐப்பசி 3 (20-10-2025) : தீபாவளிப் பண்டிகை
ஐப்பசி 4 (21-10-2025) : சர்வ அமாவாசை, லட்சுமி குபேர பூஜை, கேதார கௌரி விரதம்
ஐப்பசி 6 (23-10-2025) : யம துதிகை
ஐப்பசி 10 (27-10-2025) : சூர சம்ஹாரம். சஷ்டி விரதம்.
கார்த்திகை 1 (17-11-2025) : முடவன் முழக்கு, பிரதோஷம்.
கார்த்திகை 2 (18-11-2025) : மாத சிவராத்திரி
கார்த்திகை 3 (19-11-2025) : சர்வ அமாவாசை.
கார்த்திகை 15 (1-12-2025) : கைசிக ஏகாதசி
மார்கழி 1 (16-12-2025) : மார்கழி மாதப் பிறப்பு. தனுர்மாதப் பிறப்பு.
மார்கழி 4 (19-12-2025) : சர்வ அமாவாசை, ஸ்ரீ அனுமன் ஜெயந்தி.
மார்கழி 15 (30-12-2025) : வைகுண்ட ஏகாதசி – ஸ்ரீ ரங்கத்தில் விசேஷம்.
மார்கழி 19 (3-1-2026) : ஆருத்ரா தரிசனம்.
மார்கழி 20 (4-1-2026) : ரமண மகரிஷி ஜெயந்தி.
மார்கழி 23 (7-1-2026) : திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை.
மார்கழி 27 (11-1-2026) : கூடாரவல்லி.
மார்கழி 30 (14-1-2026) : போகிப் பண்டிகை
தை 1 (15-1-2026) : உத்தராயண. புண்ணியகாலம், மகர சங்கராந்தி – பொங்கல் பண்டிகை.
தை 2 (16-1-2026) : மாட்டுப் பொங்கல். மாத சிவராத்திரி.
தை 3 (17-1-2026) : காணும் பொங்கல்
தை 4 (18-1-2026) : தை அமாவாசை.
தை 11 (25-1-2026) : ரத சப்தமி.
தை 12 (26-1-2026) : பீஷ்மாஷ்டமி.
தை 13 (27-1-2026) : கிருத்திகை விரதம்
தை 15 (29-1-2026) : சர்வ ஏகாதசி.
தை 16 (30-1-2026) : பிரதோஷம்.
தை 18 (1-2-2026) : தைப்பூசம்.
தை 23 (6-2-2026) : திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் ஜெயந்தி
மாசி 3 (15-2-2026) : மகா சிவராத்திரி.
மாசி 4 (16-2-2026) : போதாயன அமாவாசை.
மாசி 5 (17-2-2026) : சர்வ அமாவாசை.
மாசி 18 (2-3-2026) :  ஸ்ரீ நடராஜர் திருமஞ்சனம், மாசிமகம் ஹோலிப் பண்டிகை.
பங்குனி 4 (18-3-2026) : சர்வ அமாவாசை.
பங்குனி 10 (24-3-2026) : சஷ்டி விரதம்.
பங்குனி 13 (27-3-2026) : ஸ்ரீ ராம நவமி.

பூரண சந்திர கிரகணம் – 2

விசுவாவசு வருடம், மாசி மாதம் 19-ஆம் தேதிக்கு சரியான ஆங்கிலத் தேதி 3-3-2026, செவ்வாய்க்கிழமை, சுக்கிலபட்சம் (வளர்பிறை), பௌர்ணமி திதி, பூரம் நட்சத்திரம், சிம்ம ராசியில், கடக லக்னத்தில், கேது கிரஸ்த பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கிரகணம் ஆரம்பம் : பிற்பகல் மணி 3.20
கிரகணம் மத்தியமம் : பிற்பகல் மணி 5.04
கிரகணம் முடிவு : இரவு மணி 7.53
அன்று காலை 8.30 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகர்கள், சிறுகுழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு.பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்செவ்வாய்க்கிழமைகளில் பிறந்தவர்கள், பரணி, மகம், பூரம், பூராடம் நட்சத்திரங்்களில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். பௌர்ணமி சிரார்தத்தை (திதியை) மறுதினம் செய்ய வேண்டும். கிரகண காலத்தில், தாய் – தந்தை இழந்தவர்களுக்கு, பித்ருக்களுக்கு தில (எள்) தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால், மறைந்த முன்னோர்கள் திருப்தியும், மகிழ்்ச்சியும் அடைந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் வெளியே வரக்கூடாது. கிரகணச் சாயை கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கும். கிரகண காலத்தின்போது, இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் தியானம் செய்துகொண்டிருக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின்பு, நீராடி, அவரவர் குல வழக்கப்படி திருநீறணிந்து, இறைவனைப் பூஜிக்க வேண்டும்.

நவகிரகங்களின் சக்தி!

நவகிரகங்களின் சக்தி!
நவகிரகங்களின் சக்திகளுக்கு ஏற்ப, அவற்றின் பொறுப்புகளும் ஆண்டுதோறும் மாறுபடுகின்றன. இம்மாறுதல்களுக்கேற்ப, அவைகளுக்கு பதவிகளும் குறிப்பிடப்படுகின்றன ஜோதிடக் கலையில்!
இப்பதவிகள், அவற்றின் சக்தியையே குறிக்கின்றன. இவ்விதியின் அடிப்படையில், விசுவாவசுப் புத்தாண்டிலும், கிரகங்களுக்குக் கீழ்க்கண்டபடி, பதவிகள் கூறப்பட்டுள்ளன.

ராஜா : சூரியன்
மந்திரி : சந்திரன்
சேனாதிபதி : சூரியன்
அர்க்காதிபதி : சூரியன்
மேகாதிபதி : சூரியன்
தான்யாதிபதி : செவ்வாய்
ரசாதிபதி : சனி

பலன்கள்: புத்தாண்டின் நாயகனாக சூரியன் திகழ்வதால், மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். ரத்தம், நரம்புகள் மற்றும் இதயம், சம்பந்தமான நோய்கள் குறையும். மக்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்கமும் அதிகரிக்கும். நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள தேச பக்தியினர் பலம் பெறுவார்கள். சந்திரன், மந்திரியாக விளங்குவதால், முத்து, பவழம், நவரத்தினங்கள் ஆகியவற்றின் விலை குறையும். ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்யும்.சூரிய பகவான் சேனாதிபதியாக வீற்றிருப்பதால், தேச விரோதிகள் ஒடுக்கப்படுவார்கள். தேச பக்தி அதிகரிக்கும். உலக நாடுகளிடையே பகையுணர்ச்சி மேலிடும். ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரும். பாகிஸ்தானில் உள்நாட்டுக் கலவரங்கள் அதிகரிக்கும். இந்திய – சீன உறவில் நல்ல மாற்றம் ஏற்படும். உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தைப் பெறும். இந்திய – அமெரிக்க உறவில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏற்படும். இந்தியாவின் ராணுவ பலம் அதிகரிக்கும். மத்திய கிழக்கு நாடுகளான, துபாய், கத்தார், அபுதாபி, சவுதி அரேபியா ஆகியவற்றுடன் வர்த்தகத் தொடர்பு மேம்படும்.

 

The post விருப்பங்களை நிறைவேற்றுமா விசுவாவசு புத்தாண்டு..? appeared first on Dinakaran.

Related Stories: