புதுடெல்லி: அமைச்சர் பதவியை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று புதிய பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை திரும்பப்பெறக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தது கிடையாது. சாட்சியாக கூட இல்லாத ஒரு நபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க கூடாது. மேலும் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை ஆகும்’’ என்று தெரிவித்துள்ளார்.
The post உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி பிரமாணப் பத்திரம் appeared first on Dinakaran.