சார்லஸ்டோன் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இன்று ஜெஸிகா, கெனின் மோதல்

டேனியல் ஐலேண்ட்: சார்லஸ்டோன் ஓபன் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் நேற்று, அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் டேனியல் ஐலேண்ட் நகரில் மகளிர் மட்டுமே பங்கு பெறும் சார்லஸ்டோன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா, ரஷ்யாவின் ஏகதெரினா அலெக்ஸாண்ட்ரோவா மோதினர். இருவரும் சளைக்காமல் ஆடியதால் முதல் இரு செட்களும் சவாலாக அமைந்தன. அதனால், ஆளுக்கொரு செட்டை கைப்பற்றினர்.

வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை பெகுலா அபாரமாக ஆடி வசப்படுத்தினார். அதனால், 6-2, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் அவர் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் சோபியா கெனின், அமண்டா அனிசிமோவா மோதினர். முதல் செட்டில் 5-2 என்ற புள்ளிக் கணக்கில் கெனின் முன்னிலை பெற்றிருந்த நிலையில் காயம் காரணமாக அமண்டா வெளியேறினார். அதனால், கெனின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அமெரிக்க வீராங்கனைகள் ஜெஸிகா, கெனின் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.

The post சார்லஸ்டோன் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இன்று ஜெஸிகா, கெனின் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: