மின்னணு துறையில் பிப்ரவரி மாதம் வரை தேசிய அளவில் ஏற்றுமதியில் தமிழ்நாடு 37% பங்களிப்பு படைத்து சாதனை படைத்துள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

சென்னை: மின்னணு துறையில் பிப்ரவரி மாதம் வரை தேசிய அளவில் ஏற்றுமதியில் தமிழ்நாடு 37% பங்களிப்பு படைத்து சாதனை படைத்துள்ளது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மின்னணு துறையில், இந்த நிதியாண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழ்நாடு தேசிய ஏற்றுமதியில் 37%ஐ ஏற்றுமதி செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. இரண்டாம் இடத்தில் கர்நாடகம் 20% பங்குடன் உள்ளது. ஆந்திர பிரதேசம் 10வது இடத்தில் உள்ளது.

2021ல் 1.86 பில்லியன் US$ ஆக இருந்த ஏற்றுமதி, திராவிட மாடல் ஆட்சியில் மளமளவென வளர்ந்து, இன்று 12.5 பில்லியன் US$ தாண்டி உயர்ந்து வருகிறது. தமிழ்நாடு மேலும் வளர்ந்து விடக்கூடாது என்ற வஞ்சக எண்ணத்துடன் ஒரு கூட்டம் அரைகுறை செய்திகளை பரப்பினாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. நாம் நாடுகளுடன் போட்டிபோட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம் . சிலர் நம்மை விட பின்தங்கியுள்ள மாநிலங்களுடன் ஒப்பீடு செய்ய முயல்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறி கொண்டே இருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மின்னணு துறையில் பிப்ரவரி மாதம் வரை தேசிய அளவில் ஏற்றுமதியில் தமிழ்நாடு 37% பங்களிப்பு படைத்து சாதனை படைத்துள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: