328 கிலோ பறிமுதல் கோவை உக்கடத்தில் பைக் திருடியவர் கைது

கோவை, மார்ச் 27: கோவை உக்கடத்தில் பைக் திருடிய நபரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை குனியமுத்தூர் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ரபீக் (39). உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி மார்க்கெட்டுக்கு வழக்கம்போல வேலை சென்றார். தனது பைக்கை உக்கடம் ராமர் கோயில் வீதியில் நிறுத்திவிட்டு பணிபுரிந்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது பைக் காணாமல் போயிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் பைக்கை தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரபீக் மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரது பைக்கை ஒருவர் ஓட்டி வருவதை பார்த்தார். உடனே ரபீக் அந்த நபரை மடக்கி பிடித்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் உக்கடம் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்த அபாஸ் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post 328 கிலோ பறிமுதல் கோவை உக்கடத்தில் பைக் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: