டாகா: வங்கதேச கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் (36) உள்ளூர் போட்டியில் விளையாடியபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருகிறார். வங்கதேச முன்னாள் கேப்டன் தமிம் இக்பால், 391 போட்டிகளில் ஆடியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை உள்ளூர் போட்டி ஒன்றில் அவர் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதை கண்டறிந்தனர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய்பட்டதாகவும் தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
The post வங்கதேச முன்னாள் கேப்டன் கிரிக்கெட் ஆடியபோது தமிமுக்கு மாரடைப்பு appeared first on Dinakaran.