எருதாட்டம் நடத்திய 12 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, மார்ச் 26: கிருஷ்ணகிரி அடுத்த மரிக்கம்பள்ளி மாரியம்மன் கோயில் அருகே, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி, நேற்று முன்தினம் எருது விடும் திருவிழா நடந்தது. இதுபற்றி மரிக்கம்பள்ளி விஏஓ முனியப்பன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எருது விடும் விழா ஏற்பாடுகளை செய்த அந்த பகுதியை சேர்ந்த மல்லன், ராமன் ஆகிய 2பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் காவேரிப்பட்டணம் பந்தேரி கிராமத்தில், மாவட்ட நிர்வாக அனுமதியின்றி நேற்று முன்தினம் நடந்த எருது விடும் திருவிழா பற்றி, சாப்பத்தி விஏஓ சதீஷ்குமார், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முருகேசன், முருகன், சின்னராஜ், மணி ஆகிய 4பேர் மீதும், வேப்பனஹள்ளி பெரியசூலாமலை கிராமத்தில் நேற்று முன்தினம் அனுமதியின்றி நடந்த எருதாட்ட விழா பற்றி, வேப்பனஹள்ளி எஸ்எஸ்ஐ முனிராஜ் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணி, மாரப்பன், வேணுகோபால், ராமகிருஷ்ணன், பைரப்பா, சிவா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post எருதாட்டம் நடத்திய 12 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: