சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தொகுதி வாரியாக தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம், மார்ச் 11: சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தொகுதி வாரியாக தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, தேர்தலை சிறப்பாக நடத்திடும் வகையில் வேட்புமனு தாக்கல், மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் விழிப்புணர்வு, தேர்தல் தொடர்பான செயலிகள், மிண்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தபால் ஓட்டு போன்ற தலைப்பின் கீழ் மாவட்ட அளவில் பயிற்சி அளிப்பதற்காக வட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகளை கொண்டு மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட தலைப்புகளில் சட்டமன்ற தொகுதி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க சட்டமன்ற அளவிலான பயிற்சியாளர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படி உருவாக்கப்பட்ட மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்களின் மூலம், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில், சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்ட பயிற்சியாளர்கள், மாவட்ட அளவில் உள்ள பொறுப்பு அலுவலர்கள், உதவி பொறுப்பு அலுவலர்கள், சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்ட பொறுப்பு அலுவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது சரிபார்க்கப்பட வேண்டியவைகள், மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம், வாக்குப் பதிவு முந்தைய நாள் அன்று பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் இதர வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த உடன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள், தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேர்தல் தொடர்பான புகார்கள் C-Vigil செயலியில் எவ்வாறு கையாள வேண்டும். மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கைத் தடம் கையாளுவது, பொது தபால் ஓட்டு, மாற்றுத்திறனாளி மற்றும் 85+ (வயது மூத்தோர்கள்) தபால் ஓட்டுகள் கையாள்வது மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று தபால் ஓட்டுகளை சரிபார்த்து எண்ணுவது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories: