வேலூர், மார்ச் 21: தமிழகத்தில் பிளஸ்1 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களின் தேர்வு நிறைவு பெற்று முக்கிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன்கள் ஆகிய பாடத்திற்கான தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு வேலூர் மாவட்டத்தில் 80 மையங்களில் நடந்தது.இதற்காக 16 ஆயிரத்து 691 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன்கள் தேர்வை 16 ஆயிரத்து 298 பேர் எழுதினர். தேர்வுக்கு 393 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். தேர்வு முறைகேட்டிலும் யாரும் ஈடுபடவில்லை என தேர்வுத்துறை அதிகாரிகள் ெதரிவித்தனர்.
The post பிளஸ் 1 தேர்வில் 393 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.