கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஓராண்டாக சாட்சி சொல்ல வராத டிஎஸ்பிக்கு வாரன்ட்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை சி.வி.எம்.நகரைச் சேர்ந்த சதீஷ் (20), காமராஜர் நகரைச் சேர்ந்த பரத் (19) ஆகியோரை விஷ்ணுகாஞ்சி போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க விசாரணை அதிகாரியாக இருந்த அப்போதைய விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகத்துக்கு (தற்போது இவர், திருவண்ணாமலை மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார்) பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து, அவருக்கு வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை வருகிற 26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.

The post கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஓராண்டாக சாட்சி சொல்ல வராத டிஎஸ்பிக்கு வாரன்ட்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: