இதையடுத்து சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டாரவி தேஜா, மண்டல உதவி ஆணையர் விஜயபாபு, செயற்பொறியாளர்கள் பாண்டியன், பாபு, கவுன்சிலர் சொக்கலிங்கம் ஆகியோர் ரயில்வே சுரங்க பாதையை பார்வையிட்டனர். இதன்பின்னர் ராட்சத நீர் உறிஞ்சும் மோட்டார் மையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். ‘’பராமரிப்பு பணிக்காக சுரங்கப்பாதை போக்குவரத்தை நிறுத்தவேண்டும். தற்போது 10, 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றுகொண்டிருப்பதால் மாணவ, மாணவிகள் சுரங்கப்பாதை பயன்பாடு தடைப்படாமல் இருக்க தேர்வு முடிந்ததும் சுரங்கப்பாதை பணி துவங்கும்’’ என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post திருவொற்றியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் ஊற்றுநீர் தேங்குவதால் அவதி appeared first on Dinakaran.