இந்நிலையில், அடுத்த மாதம் கோடை சீசன் துவங்கும் நிலையில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் துவங்கி நடத்து வருகிறது. 35,000 தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் நடவு செய்வதற்காக அலங்கார செடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அலங்கார செடிகள் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்கள் மற்றும் சரிவுகளில் நடவு செய்யப்பட உள்ளன.
The post கோடை சீசன் நெருங்குகிறது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் அலங்கார செடி நடவு பணி தீவிரம் appeared first on Dinakaran.