ஆசிரியர் பணி நியமன ஊழல் திரிணாமுல் அமைச்சரின் மருமகன் அப்ரூவர்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் கடந்த 2022ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பார்த்தா சட்டர்ஜியின் மருமகன் கல்யாண்மாய் பட்டாசார்யாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு விருப்பம் தெரிவித்து கல்யாண்மாய் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தை அணுகினார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அவர் நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

The post ஆசிரியர் பணி நியமன ஊழல் திரிணாமுல் அமைச்சரின் மருமகன் அப்ரூவர் appeared first on Dinakaran.

Related Stories: