×
Saravana Stores

பி.எட். முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை தொடக்கம்

சென்னை: நடப்பாண்டு பி.எட். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை முதல் தொடங்குகிறது. பி.எட். படிப்பில், தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இவை அனைத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பபடுகின்றன. அதன்படி, இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 26ம் தேதி நிறைவடைந்தது. நடப்பாண்டு மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 2,187 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி இருந்தனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் செப்.30ம் தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து கலந்தாய்வு அக்டோபர் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் பாட வாரியாக நடந்தது. இதில் மொத்தம் 1500 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில் முதலாம் ஆண்டு பி.எட். மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை (அக்.28) முதல் தொடங்க உள்ளது.

The post பி.எட். முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...