இதனால் அச்சாலையில் கனரக வாகனங்களுக்கு பின்னால் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை சேதமாகி மண்புழுதி பறப்பதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் பலருக்கு மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற பல்வேறு சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டு வருகின்றன. மேலும், இந்த நெடுஞ்சாலைக்கு அருகிலேயே ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் மாணவர்கள் விடுதி உள்ளது.
இச்சாலையில் தொடர்ந்து மண்புழுதி பறந்து வருவதால், மாணவர்களின் உணவுகளிலும் மண்புழுதி படர்ந்துள்ளது. எனவே, செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பைபாஸ் சாலை பகுதியில் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அங்கு மண்ணை கொண்து தரமான தார்சாலைகளை அமைத்திட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post செங்கல்பட்டு அருகே புழுதி பறக்கும் ஜிஎஸ்டி சாலை: முறையாக சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.