திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு இல்லை

சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் தற்போது வாயு கசிவு இல்லை என்று தேசிய பேரிடர் மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது. வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. ஆய்வகம், கழிவறை, குளிர்சாதன பெட்டியை ஆய்வு செய்ததில் வாயு ஏதும் வெளியேறவில்லை . சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயக்கமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு இல்லை appeared first on Dinakaran.

Related Stories: