ஏர்வாடியில் சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்

கேடிசி நகர்,அக்.23: ஏர்வாடியில் சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு ராபர்ட் புரூஸ் எம்பி பரிசு வழங்கினார். நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் சஹாபா சிலம்ப கிளப் சார்பில் ‘நம்ம ஊர் சிலம்பம்’ என்ற தலைப்பில் சிலம்ப போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகள் தங்களது சிலம்பத் திறனை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நெல்லை தொகுதி எம்.பி., ராபர்ட் புரூஸ், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்வில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் களக்காடு சித்திக், நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் மோகன்குமாரராஜா, தமிழ்ச்செல்வன், களக்காடு வட்டாரத் தலைவர் பிராங்கிளின், நகர காங்கிரஸ் தலைவர் அபுபக்கர் ரீமாபைசல், விவசாய பிரிவு மாநில செயலாளர் மூத்த காங்கிரஸ் தலைவர் லெனின்பாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்டத் தலைவர் ராபர்ட் சுஜின் அந்தோனி வில்ப்ரெட், வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் லூர்து வில்சன், சசிக்குமார், ராம்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

The post ஏர்வாடியில் சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: