அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

 

தேனி, அக். 23: தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேனி அருகே தர்மபுரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சத்தியபாமா ச பொன்மலர் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஜயன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தேனி தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 40 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், மாணவ மாணவியர் ஆசிரிய, ஆசிரியைகள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் பிரதிநிதி சரவண பாபு நன்றி கூறினார்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: