முதலமைச்சர் கோப்பை மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸ் போட்டி

 

கோவை, அக்.23: முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸ் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், வடகமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை மாவட்டத்தில் இருந்து ஆண்கள் பிரிவில் 2 பேரும் பெண்கள் பிரிவில் 3 பேரும் என மொத்தம் 5 பேர் கலந்து கொண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் தீபிகாராணி வெள்ளிப் பதக்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் ஹேமா மற்றும் ரிஸ்வான பர்வின் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். அதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அவிநாஷ் வெள்ளி பதக்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் சரவணக்குமார் மற்றும் அவிநாஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

The post முதலமைச்சர் கோப்பை மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸ் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: