இரும்பு கழிவை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

 

அவிநாசி, அக்.23: திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் கிராம ஊராட்சியில் காளம்பாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளுக்கு இடையே உள்ள கல்குவாரிகளில் கோவையிலிருந்து கடந்த 3 நாட்களுக்கு மேலாக இரும்பு கழிவை கொட்டி வருகின்றனர். இதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில், மீண்டும் கோவையிலிருந்து லாரி மூலம் காஸ்டிங் கழிவு என்று அழைக்கக்கூடிய இரும்பு கழிவை கல்குவாரியில் கொட்ட வந்தனர். இதனால், கிராமமக்கள் திரண்டு வந்து வாகனத்தை சிறை பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதன் மீது உடனடியாக காவல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

The post இரும்பு கழிவை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: