இதனால், சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சகஸ்ரபத்மநாபபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டுமென பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்குள்ளும் இந்த கழிவுநீர் செல்லும் நிலை இருப்பதால், பொதுமக்களின் வசதிக்காக கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.