விழுப்புரம், தேனியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல தேனியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரம், தேனியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: