சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்க ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கட்டுமான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: