குடிநீர் வரி செலுத்துவோர் ஊக்கத் தொகையை பயன்படுத்த விழிப்புணர்வு

சென்னை: குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய வரி செலுத்துவோர் 5 சதவீத ஊக்கத் தொகையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு வரும் 30ம் தேதிக்குள் குடிநீர் மற்றும் கழிவுநீர வரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

சென்னை திருவிக நகர் மண்டல குடிநீர் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் இதுகுறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராதாகிருஷ்ணன், பகுதி பொறியாளர் பாக்கிய லட்சுமி, துணைப்பகுதி பொறியாளர் சுரேஷ்குமார், கணக்கு அலுவலர் பாக்யா உள்ளிட்டோர் முகாமிற்கு வந்தவர்களுக்கு வரி செலுத்துவோருக்கான சலுகைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

 

The post குடிநீர் வரி செலுத்துவோர் ஊக்கத் தொகையை பயன்படுத்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: