மதுரை எய்ம்ஸ் 2025 டிசம்பரில் வகுப்புகள் துவக்கம்

திருப்பரங்குன்றம்: மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் கடந்த மே மாதம் தொடங்கின. மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரி, விடுதிகள், உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கொண்ட முதல் கட்டிடம் 18 மாதங்களுக்குள், அதாவது 2025 டிசம்பருக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முழு கட்டுமான பணிகள் 2027 ஜனவரிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது நடைபெறும் பணிகளை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர், ‘‘2025 டிசம்பரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டிடத்தில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்’’ என கூறியுள்ளார்.

The post மதுரை எய்ம்ஸ் 2025 டிசம்பரில் வகுப்புகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: