மக்கள் நீதி மய்யத்தின் தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டம்

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின், நம்மவர் தொழிற்சங்க பேரவை 4ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், 5ம் ஆண்டு பேரவை துவக்க விழா மற்றும் பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.  நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் புதிய அலுவலகத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் திறந்து வைத்தார்.

பேரவைக் கொடியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மௌரியா ஏற்றி வைத்தார். பேரவை பொதுக்குழுவில், ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பதில், நிரந்தர பணியாளர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மக்கள் நீதி மய்யத்தின் தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: