ஜெகதீசன் 65 ரன் (101 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சைனி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து சாய் சுதர்சன் – வாஷிங்டன் சுந்தர் இணைந்து டெல்லி பந்துவீச்சை பதம் பார்த்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு ஒரு விக்கெட் இழப்புக்கு 379 ரன் குவித்துள்ளது. சுதர்சன் 202 ரன் (259 பந்து, 23 பவுண்டரி, 1 சிக்சர்), வாஷிங்டன் 96 ரன்னுடன் (170 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.
The post சுதர்சன் இரட்டை சதம்: தமிழ்நாடு 379/1 appeared first on Dinakaran.