இந்த நிலையில்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மபி முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் பாஜ மேலிட பார்வையாளர்களாக இருந்தனர். இதில், பாஜ கட்சியின் தலைவராக நயாப் சிங்கை எம்எல்ஏக்கள் கிஷன் குமார் பேடி, அனில் விஜ் ஆகியோர் வழிமொழிந்தனர். கூட்டத்தில் பாஜ கட்சியின் தலைவராக நயாப்சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அமித் ஷா அறிவித்தார். இதையடுத்து மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை அவர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். முதல்வர் பதவி ஏற்பு விழா இன்று காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
The post பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி மீண்டும் தேர்வு: இன்று பதவியேற்பு appeared first on Dinakaran.