அன்சிகா மார்ட் நிறுவன ரூ.30 கோடி மோசடியில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது!!

குமரி: அன்சிகா மார்ட் நிறுவன மேலாளர்கள் அதிகவட்டி தருவதாக ரூ.30 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலீட்டுக்கு 10% வட்டி தருவதாகக் கூறி 400-க்கும் மேற்பட்டோரிடம் அன்சிகா மார்ட் நிறுவன மேலாளர்கள் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மோசடி வழக்கில் தந்தை, மகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவான நிலையில் கடந்த மாதம் 28-ம்தேதி 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், வழக்கில் தலைமறைவாக இருந்த ஆனந்த்ராஜன், அரவிந்த்ராஜன் ஆகியயோரை தற்போது குமரி போலீஸ் கைது செய்தது.

The post அன்சிகா மார்ட் நிறுவன ரூ.30 கோடி மோசடியில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: