சந்திப்புக்கு பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான் அளித்த பேட்டி: முஸ்லிம் மன்னர்களும், முஸ்லிம் செல்வந்தர்களும் தங்களின் பல சொத்துகளை பள்ளிவாசல்கள், அடக்கத் தலங்கள் இன்னும் பல பயன்பாடுகளுக்காக தானமாக வழங்கியுள்ளனர். இந்த வக்பு வாரியங்கள் தான் இந்தச் சொத்துகளை நிர்வகிக்கின்றன. அதில் சில சட்டத் திருத்தங்களை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றவும், இஸ்லாமிய சமுதாய மக்களின் உரிமைகளைப் பறிக்கவும் ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. இஸ்லாமியர்களின் உரிமையைப் பறிப்பதற்கும், மதச் சார்பின்மையை மழுங்கச் செய்வதற்கும்தான் இம்மசோதா உதவுமே தவிர இதனால் இஸ்லாமியர்களுக்கு எள்ளளவும் நன்மை ஏற்படப் போவதில்லை. வக்பு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை கொண்டு வரும் இம்மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதோடு, ராஜ்யசபாவில் ஓட்டெடுக்கும் சூழல் வந்தால் அதை புறக்கணிக்காமல் எதிர்த்து வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.