ரேஸ் கிளப் குத்தகை ரத்தானதை எதிர்த்து கிளப் சார்பில் உரிமையியல் வழக்கு: அரசு பதில் தர உத்தரவு

சென்னை: சென்னை கிண்டியில் 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகை பாக்கி சுமார் 731 கோடி ரூபாய் செலுத்தாததையடுத்து, சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து தமிழக அரசு செப்டம்பர் 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிலத்தை அரசு இதுவரை சுவாதினம் எடுக்கவில்லை என்று ரேஸ் கிளப் தரப்பிலும், ஏற்கனவே சுவாதினம் எடுத்துகொள்ளப்பட்டது என்று அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. எனவே, உரிமையியல் வழக்கை உடனடியாக விசாரிக்ககோறும் மனுவுக்கு செப்டம்பர் 23ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post ரேஸ் கிளப் குத்தகை ரத்தானதை எதிர்த்து கிளப் சார்பில் உரிமையியல் வழக்கு: அரசு பதில் தர உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: