வக்பு வாரிய தலைவராக தேர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நவாஸ்கனி எம்பி வாழ்த்து பெற்றார்

சென்னை: சென்னையில் உள்ள வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டதில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் புதிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் எம்பியுமான கே.நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, நவாஸ்கனி நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, எம்.கே.கான், எஸ்.கே.நவாஸ், முகமது பஷீர், சையத் ரெய்கான், பாத்திமா முசாபர், சிறுபான்மை நல இயக்குனர் ஆசியா மரியம், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் தாரேஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

The post வக்பு வாரிய தலைவராக தேர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நவாஸ்கனி எம்பி வாழ்த்து பெற்றார் appeared first on Dinakaran.

Related Stories: