கைதி துன்புறுத்தல் விவகாரம்: நிலை அறிக்கை தயாரிப்பு

வேலூர்: வேலூர் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் துன்புறுத்தல் விவகாரத்தில் நிலை அறிக்கை தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. வேலூர் ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்டோரிடம் நேற்று சிபிசிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். வேலூர் சிறை டிஐஜியின் பாதுகாவலர் ராஜூ, சிறை காவலர்கள் பிரசாந்த், விஜியிடமும் விசாரணை நடைபெற்றது. வேலூர், சேலம் சிறைகளில் செவ்வாய், புதன் கிழமைகளில் சிபிசிஐடி போலீசார் 10 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக நிலை அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

The post கைதி துன்புறுத்தல் விவகாரம்: நிலை அறிக்கை தயாரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: