கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை  எடுத்துள்ளனர். கடந்த 16ம் தேதி இரவு பேருந்தில் பெண் பயணிகளின் அருகே அமர்ந்த மூவரும் தகாத வார்த்தைகள் பேச, நடத்துநர் இருக்கை மாறி அமருமாறு கூறியுள்ளார். இதனால் நடத்துநர் விகாஸை மதுபோதையில் இருந்த மூவரும் தாக்கியுள்ளனர்

The post கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: