காரில் வந்தவரிடம் ரூ.9 லட்சம் பறிப்பு எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.9 லட்சத்துடன் காரில் வந்த நபரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி அந்த பணத்தை போலீசார் பறித்துக் கொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகார் தொடர்பாக, திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே, ஆத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்ஐ சுந்தரம், ஏட்டு குணசுந்தர் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். இந்நிலையில் எஸ்ஐ சுந்தரம், ஏட்டு குணசுந்தர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

The post காரில் வந்தவரிடம் ரூ.9 லட்சம் பறிப்பு எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: