கேளம்பாக்கம் அருகே காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல்: வாலிபருக்கு வலை

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கேளம்பாக்கம் அருகே தந்தையை இழந்த கல்லூரி மாணவி ஒருவர், தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர், மாணவியை சந்தித்து தன்னை காதலிக்குமாறு மிரட்டியுள்ளார். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததோடு, தனது தந்தையை இழந்த நிலையில் தாய் ஆதரவில் படித்து வருவதாகவும், தன்னை தொல்லை செய்யவேண்டாம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 17ம்தேதி இரவு 9 மணிக்கு மாணவி ஓஎம்ஆர் சாலையில் உள்ள கடைக்கு சென்றபோது வழிமறித்த முரளி, தன்னை காதலிக்குமாறும் திருமணம் செய்துகொள்ளுமாறும் மிரட்டியுள்ளார்.

மேலும் மாணவியை தாக்கிவிட்டு உன் குடும்பத்தையே கொளுத்திவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி கூச்சல் போட் டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்களும் மாணவியின் சகோதரரும் முரளியை மடக்கிபிடித்து விசா ரித்துள்ளனர். முரளி அவர்களையும் தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் மாணவியின் தாய் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கேளம்பாக்கம் அருகே காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல்: வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: