தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது

சென்னை: திருவல்லிக்கேணி பாரதி சாலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த 61 ேபரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. காவல்துறை அறிவித்த 17 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இந்நிலையில், இந்து முன்னணி சார்பில் சென்னை மாவட்ட தலைவர் மனோகர் தலைமையில் நிர்வாகிகள் கிஷோர், இளங்கோ உள்ளிட்டோர் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசார் தடை விதித்திருந்த திருவல்லிக்கேணி பெரிய மசூதி தெரு வழியாக சிலையை எடுத்து செல்ல முயன்றனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் தடையை மீறி சிலையை எடுத்து செல்ல முயன்ற இந்து முன்னணியினரை கைது செய்தனர்.

The post தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: