அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலரும் உடன் சென்றுள்ளனர்.பிரமாண்ட விநாயகர் சிலையுடன் மினி சரக்கு வேன் ராயபுரம், எஸ்.எம்.செட்டி தெரு சந்திப்பில் சென்றபோது வாகனத்தில் விநாயகர் சிலையை பிடித்தபடி சென்ற காசிமேடு, சிங்காரவேலன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (30) என்ற வாலிபர், நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரேம்குமார், நேற்றிரவு உயிரிழந்தார். காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
The post காசிமேடு விநாயகர் ஊர்வலத்தில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.