நாகை அருகே உள்ள அரசு காப்பகத்தில் இருந்து 8 சிறுமிகள் மாயம்..!!

நாகை: நாகை அருகே உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 8 சிறுமிகள் மாயமானர்கள். சாமந்தான்பேட்டை அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் 8 சிறுமிகள் மாயமானர்கள். பள்ளி முடிந்து திரும்ப வேண்டிய குழந்தைகள் இதுவரை வரவில்லை என காப்பக காவலர் கண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஒரே நாளில் 8 குழந்தைகள் மாயமாகி இருப்பதால், குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நாகை எஸ்பி ஹர்ஷிங், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் காப்பக ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

The post நாகை அருகே உள்ள அரசு காப்பகத்தில் இருந்து 8 சிறுமிகள் மாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: