சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் கைது வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் ஜாபர் சாதிக் மனு: இன்று விசாரணை

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்க துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர். ெடல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. எனவே, சட்ட விரோதமாக தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சட்டவிரோதமான கைதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், திகார் சிறையில் இருக்கும் தன்னை கைது செய்வதற்காக அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாரன்ட் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.

The post சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் கைது வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் ஜாபர் சாதிக் மனு: இன்று விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: