நேற்று அதிகாலை 3 மணியளவில் புதுச்சேரி-கடலூர் சாலையில் ரெட்டிச்சாவடி அடுத்த கரிக்கன் நகர் மலாட்டாறு பாலம் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சுக்கு அடியில் சிக்கி டிரைவர் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த திருவாரூர் லெனின் (45), சென்னை சுந்தரி (53), மணிகண்டன் (41), பசுபதி (41), வசந்த் (23), முருகன் (44), மாறன் (80), ராம் (30), கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 49 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து ரெட்டிச்சாவடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் உதவியுடன் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து காரணமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post புதுச்சேரி-கடலூர் சாலையில் தடுப்பு கட்டையில் மோதி சென்னை பஸ் கவிழ்ந்தது: டிரைவர் பலி; 49 பேர் படுகாயம் appeared first on Dinakaran.