இதற்கு முக்கிய காரணம் சாலையோரக் கடைகளே ஆகும். இந்த சாலையோரக் கடைகளை அகற்றவேண்டும் என பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பலமுறை கலெக்டருக்கும், காவல் துறைக்கும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, எஸ்.ஐ. பூபாலன், போக்குவரத்து எஸ்.ஐ. சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று திடீரென அதிரடியாக சாலையோர கடைகளை அகற்றினர். மேலும் சாலைப்பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தினாலோ, கடைகள் வெளியே வந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
The post ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.