இந்நிதியை உடனடியாக வழங்கக் கோரியும், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவை உடனே அமைப்பது, தேசிய கல்விக்கொள்கை 2020ஐ திரும்பப் பெறுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 80 அரசு கல்லூரிகளில் நேற்று வாயில் முழக்க போராட்டம் நடந்தது. இப் போராட்டத்தில் ஏறத்தாழ 3,500 ஆசிரியர்கள் பங்கேற்றனர். சென்னை அரசு கல்லூரிகளில் நடந்த போராட்டத்தில் 650 பேர் கலந்து கொண்டதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் தெரிவித்தார்.
The post தமிழகம் முழுவதும் 3500 பேர் பங்கேற்பு அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம் appeared first on Dinakaran.