மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்களும் கொரோனா காலத்தில் பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு சலுகை வழங்குவதாக அரசு தெரிவிக்கவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மேற்படிப்பில் சேரும் போது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதால், பயிற்சி காலத்தை குறைக்க வேண்டும் என்று சலுகை கோர முடியாது. நியமன உத்தரவின்படி பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும். சிறப்பு நிபுணத்துவ படிப்புக்களை படிக்கும் மருத்துவர்களுக்கு அரசு பெருந்தொகையை செலவிடுகிறது. படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுப்பது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை மக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் செயல். மருத்துவர்களின் இந்த அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல என்று தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post உத்தரவாதம் தந்து மருத்துவ மேற்படிப்பு முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுப்பது பாராட்டத்தக்கதல்ல: உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.