விளையாடும்போது கழுத்தில் துப்பட்டா இறுக்கி சிறுவன் சாவு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வகுமாரபாண்டி. இவரது மகன்கள் காமேஷ் அருண்குமார்(12), கமலேஷ் வருண்குமார்(12). இரட்டையர்கள். மகள் சக்திகாவியாஸ்ரீ. மூவரும் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது காமேஷ் அருண்குமார் கழுத்தில் துப்பட்டாவை கட்டி நாய் போல் இழுத்துச் சென்று விளையாடினர். இதில் எதிர்பாராதவிதமாக துப்பட்டா கழுத்தை இறுக்கி காமேஷ்அருண்குமார் மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த காமேஷ் அருண்குமார் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விளையாடும்போது கழுத்தில் துப்பட்டா இறுக்கி சிறுவன் சாவு appeared first on Dinakaran.

Related Stories: