இந்த நிலையில் இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த சிறுத்தை அங்கு வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது. கூண்டின் மற்றொரு பகுதியில் கட்டி வைத்திருந்த நாய் குரைத்ததால் அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் சென்று பார்த்தபோது கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி வனத்துறை அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கூண்டில் சிக்கிய சிறுத்தையை வேறு பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். சிறுத்தையை எங்கு கொண்டு சென்று விடுவிப்பது என்பது குறித்து வனத்துறை உயர்அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
The post தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது appeared first on Dinakaran.