திமுக அரசு பொறுப்பேற்று முன்னேற்ற பாதையில் மூன்றாண்டாக பீடுநடை: முத்தரசன் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: வகுப்புவாத, மதவாத, பிளவுவாத சக்திகள், பாஜ ஒன்றிய அரசின் அதிகாரத்தின் துணையோடு மாநில உரிமைகளை பறித்து வந்த நிலையில், ஊழல் முறைகேடுகளில் புதைந்து கிடந்த தமிழகத்தை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைத்து, திமுகழகம் மீட்டெடுத்து 3 ஆண்டுகளாக முன்னேற்ற பாதையில் பீடு நடை போட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, மாநில உரிமைகளை வென்றெடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக அரசுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார்: வாரியங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் பாழ்பட்டு முடங்கி கிடந்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் வாரியங்கள் மிக வேகமாக செயல்பட முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த ஆட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஜூன் 4ம் தேதிக்கு பிறகு தெரியவரும். தமிழ்நாடு புதுவை உட்பட 40 இடங்களிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

The post திமுக அரசு பொறுப்பேற்று முன்னேற்ற பாதையில் மூன்றாண்டாக பீடுநடை: முத்தரசன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: