இந்த அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் தணிக்கை குழு அறிக்கை குறிப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் சமூகமாக நடந்து கொள்ளவும் இந்த அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர் மேற்சொன்ன உள்ளூர் தணிக்கை குழுவின் அசிஸ்டன்ட் டைரக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர்களுக்கு லஞ்ச பணமாக கொடுப்பதற்காக கிடைத்த தகவலை பெற்று கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் மற்றும் கடலூர் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் சுபத்ரா ஆகியோர்களின் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த திடீர் ஆய்வின்போது சேத்தியாதோப்பு தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் கணக்கில் வராத லஞ்ச பணம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது மேலும் தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
The post சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை தீவிர சோதனையில் ரூ.1.20 லட்சம் கைப்பற்றப்பட்டது appeared first on Dinakaran.